Sunday, December 10, 2017

ஆற்றாமை

மீனாத்தாளுக்கு நேரம் ஆக ஆக மனதில் பயமும் அதிகரித்துக்கொண்டே இருந்ததுபள்ளிக்குச் சென்றிருந்த அவளுடைய மகன் வேலு இன்னும் வரவில்லைவழக்கமாக ஐந்தரை மணிக்கெல்லாம் வந்துவிடுவான்இன்று நேரம் ஆறு மணியை நெருங்கிக்கொண்டு இருந்தது.  நல்ல வெய்யில் காலமாதலால் இன்னும் அரை மணி நேரம் வெளிச்சம் இருக்கும்அதற்குள் போனால்தான் உண்டுஇருட்டி விட்டால் தர மாட்டார்கள்நாளைக்கு வா என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லி திருப்பி அனுப்பிவிடுவார்கள். இவன் என்னடாவென்றால் இன்றைக்குப் பார்த்து நேரம் கடத்துகிறான்ஏனென்று தெரியாமல் உள்ளுக்கும் வெளிக்குமாய் அரை நிடத்திற்கொருமுறை வீதி ஓரத்தைப் பார்த்தபடியே தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
அதோ யாரோ ஒரு பையன் பையை வீசிக்கொண்டே வருவதுபோல் தெரிகிறதே என்று கண்ணை சற்று குறுக்கிக்கொண்டு பார்த்தாள்நல்ல வேளை, வேலுதான்உடனே உள்ளே போய் கஞ்சியில் கொஞ்சம் உப்பும் ஒரு வத்தல் மிளகாயும் உள்ளங்கையில் தேய்த்து அதை கலக்கி லோட்டாவில் வழிய வழிய நிரப்பிக்கொண்டு அவன் வீட்டுக்குள் வரும் முன்னரே வாசலில் லோட்டாவோடு வரவேற்றாள்.
வாடி வேலுக்கண்ணு.. இந்தா இந்தக் கஞ்சியை சட்டுன்னு குடிச்சுப்புட்டு எனக்கு ஒரு சின்ன வேலை மட்டும் செஞ்சிக்குடுத்துடுடா கண்ணுஎன்று செல்லத்துடன் ஒரு வேண்டுகோளையும் வைத்தாள்அப்போதே தெரிந்தது வேலுவுக்கு, தன்னை அம்மா எங்கோ அனுப்பப் போகிறாள் என்றுஅவனுக்கும் அம்மா மேல் பிரியம் அதிகம்ஆகையால் மொத்த கஞ்சியையும் ஒரே மிடற்றில் குடித்துவிட்டு எங்க போகனும் சொல்லுஎன்றான்.
உள்ளே சென்று ஒரு நைந்துபோன துணிப்பையை எடுத்துக்கொண்டு வந்தாள் மீனாத்தாள்ஒண்ணுமில்லேடா கண்ணுவீட்டிலே ஒரு மணி கூட நொய் இல்லே.. உங்கப்பாரு வேற இன்னும் ஊரிலிருந்து வரலேவந்தா ஒரு மூட்டை அரிசி கொணந்திடுவார்அவர் வர இன்னும் ஒரு வாரம் ஆகும்போல இருக்குஇன்னிக்கு மத்தியானம் நான் வேலை செய்யற மேட்டுத்தெரு அலமேலு அம்மாகிட்ட கேட்டிருக்கேன்..ரெண்டு படி நொய் குடுக்கறேன்னு சொன்னாங்கஅதான் நீ எப்ப வருவேன்னு பாத்திட்டிருந்தேன்.   செத்த வேகமா அவங்க வீட்டுக்கு ஓடிப்போய் இந்தப் பையிலே நொய் வாங்கிண்டு வந்திடுடா கண்ணுஇருட்டறத்துக்குள்ளே போகனும்டா கண்ணு.. அதான் நான் போகாம ஒனக்கோசரம் காத்துட்டிருந்தேன்.. நீயானா ஒரே நிமிஷத்திலே ஓடிப்போய் வந்துடுவேநான் இந்த நொண்டிக்காலோட போறதுக்கே அரை மணி ஆகும்அதான்….என்றாள்.
அவ்வளவுதானே.. குடு பையை என்று அந்த துணிப்பையை வாங்கிக்கொண்டு சிட்டாய்ப் பறந்தான் வேலு.
மீனாத்தாள் ஏழையானாலும் ரோஷக்காரிகோபமும் அதிகம்சிறுவயதில் ஜுரம் வந்து ஒரு கால் வளர்ச்சி சற்று குறைந்து போனதால் விந்திவிந்திதான் நடப்பாள்அதனால்வேறு மற்றவர்களுடன் பழகுவதிலும் நாட்டமின்றி தானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பாள்படிப்பும் ஏறவில்லைஆனால் கைவேலையில் கெட்டிக்காரிவீட்டு வேலைகள் அனைத்தும் யார் தயவுமின்றி ஒற்றை ஆளாகவே செய்துவிடும் திறமையும் பலமும் பெற்றிருந்தாள்.   யாருடைய வம்புக்கும் போகமாட்டாள்காலாகாலத்தில் ஒரு கல்யாணம் செய்துவைத்து விடலாம் என்று அவளுடைய தாய் சரியான நேரத்தில் முயற்சிகள் எடுத்தாலும் மீனாத்தாளின் கால் ஊனம் மட்டுமே மாப்பிள்ளைகளுக்குப் பிரதானமாகத் தெரிந்ததுசிலபேர் வெளிப்படையாக வேண்டாம் என்று மறுத்தனர்சிலபேர் சீர் மற்றும் வரதட்சிணை பணத்தை ஊனத்தை காரணம் காட்டி கூச்சமின்றி வெளிப்படையாகவே அதிகமாகக் கேட்டனர்அதிர்ஷ்டவசமாக தூரத்து சொந்தமான தனபால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மணம் செய்துகொள்ள முன்வந்தான்கல்யாணம் நடந்து நான்கைந்து ஆண்டுகள் சந்தோஷமாவே வாழ்ந்து வந்தாள் மீனாத்தாள்.
ஆனால் அவள் வாழ்வில் விதி விளையாடியதுஅவளது அன்னை திடீரென்று காலமானாள்அதே நேரத்தில் தனபாலும் அவன் வேலை செய்த தனியார் கம்பெனி நஷ்டத்தில் இழுத்து மூடவே வேலையை இழந்தான்எவ்வளவு முயன்றும் வேறு வேலை கிடைக்கவில்லைபின்னர் யார் தயவிலோ வெளி மாநிலத்தில்தான் வேலை கிடைத்ததுசொற்ப சம்பளம்தான்ஆனால் வந்து செல்லும் செலவே அதிகம் என்பதால் அவன் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் வருகிறான். வேலுவின் பள்ளிச் செலவும் அதிகரித்துக் கொண்டே போவதால் அதையும் குறைத்துக் கொண்டான்பற்றாக்குறையை சரிகட்ட மீனாத்தாள் வீட்டு வேலைகள் செய்ய வேண்டி வந்ததுமகனின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தயங்காமல் சுணங்காமல் அந்தச் சுமையை விருப்பத்துடனே ஏற்றாள்.
பட்ட காலிலே படும் என்பது போல் தனபாலுக்கு இந்த வேலையும் இல்லாமல் போனதுஆனால் வெளிமாநிலத்தில் வேலை செய்தபோது வேற்று மொழிகளையும் ஓரளவு கற்றுக்கொண்டதனால் அவன் மனம் தளராமல் கிடைத்த வேலை எதுவானாலும் ஏற்றுக்கொண்டு இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரும்போதே ஒரு மூட்டை அரிசி மற்றும் பொருட்களோடு தான் வந்து போகிறான். ஆனால் போனமுறை ஒன்றும் கொண்டுவரவில்லைவேறு நல்ல வேலைக்கு புரோக்கர் மூலமாக முயற்சிப்பதால் முன்பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு சமாளித்துக்கொள் என்று மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறான்ஆனாலும் வரவேண்டிய சாமான்கள் இல்லாததால் இருந்த கைக்காசை வைத்துக்கொண்டு போனமாதம் ஒப்பேற்றிவிட்டாள் மீனாத்தாள்இந்த இரண்டு வாரமாகத்தான் காசும் இல்லாமல் சாமான்களும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.
இந்த வெய்யில் காலத்தில் கால் வேறு சரியில்லாமல் மெதுவாக நடக்க வேண்டியிருப்பதால் வெய்யிலுக்கு முன்பே வேலைகளை முடித்துக் கொள்ளலாம் என்றுதான் அலமேலு அம்மா வீட்டுக்கு வழக்கத்தைவிட சற்று முன்னதாகவே சென்றிருந்தாள்அலமேலு அம்மாவுக்கு என்ன களைப்போ, இவள்மேல் கோபித்துக் கொண்டாள்இப்படி சீக்கிரம் வந்து பாத்திரம் விழும் முன்னமே தேய்ச்சிட்டா மாதிரி பண்ணிடலாம்னு பாக்கிறியா? என்று பொல்லாப்பு பேசினாள்சட்டென்று கோபம் வந்தாலும் நிலைமையை மனதில் கொண்டு பொறுத்துப் போனாள் மீனாத்தாள்சாந்தமாகவே பதில் சொன்னாள்அப்படியெல்லாம் இல்லீம்மா..வெய்யில் மண்டையைப் பொளக்குதுகால் வேற சரியில்லையாஉச்சிக்கு முன்னமே வீட்டுக்குப் போகலாம்னுதான் கொஞ்சம் சீக்கிரம் வந்தேம்மா.. ஒண்ணும் பரவாயில்லைநான் கொஞ்சம் அப்படி ஒக்காந்துக்கறேன்நீங்க உங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு பாத்திரம் போடுங்க..தேய்ச்சுட்டுப் போறேன்.. என்று இனிமையாகப் பேசி அலமேலு அம்மாவை சமாளித்தாள்
வேலையெல்லாம் முடித்து கிளம்பும்போது தயக்கத்துடன் தான் கேட்டாள் மீனாத்தாள்அம்மா வீட்டிலே பணம் இல்லே சாமானும் இல்லேஒரு அஞ்சு படி அரிசி கொடுத்தீங்கன்னா உதவியா இருக்கும்மாபையனுக்கு சோறாக்கவாவது வேணுமில்லேஎன்று கெஞ்சினாள்அலமேலு அம்மாவுக்க முகம் மாறியதுஅதுதானா இன்னிக்கு காலையிலேயே ஒரு திட்டத்தோட வந்திருக்கேசரி சரி பாக்கலாம்அஞ்சு படியெல்லாம் கஷ்டம்.. ஒரு ரெண்டு படி நொய் வேணா தர்றேன்..அதுகூட இப்போ கேக்காதேஅய்யா வேலைக்குப் போன பிறகு மத்தியானமா வாஎன்றாள்.
தப்பா நினைக்காதீங்கம்மாஇந்தக் காலோட திரும்பி அவ்வளவு தூரம் வர்றது கஷ்டம்மாநான் வேணா வேலுவை.. அதாம்மா என் பையன்அவன் இஸ்கூலிலிருந்து வந்தவுடனே அனுப்பட்டுமாம்மா என்று வேண்டுகோள் விடுத்தாள்சற்றே மனமிரங்கிய அலமேலு அம்மா, சரி அனுப்பு..ஆனா சீக்கிரம் அனுப்புவிளக்கு வெச்சபிறகு வெள்ளை எதுவும் கொடுக்கக்கூடாதும்பாங்க.. பாத்துக்கோஅவன் லேட்டா வந்தா நான் கொடுக்க முடியாது என்று ஒரு நிபந்தனை விதித்தாள்.
ஏதோ இதற்காகவாது சம்மதித்தாளே என்று சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டாள் மீனாத்தாள்அப்படித்தான் இப்போது வேலுவை அனுப்பியிருக்கிறாள்.
வேலு கதவைத் தட்டவும் உள்ளிருந்து எட்டிப்பார்த்தாள் அலமேலு அம்மாஎன்னடா இவ்வளவு நேரம் கழிச்சு வர்றேஉன் அம்மா நீ ஸ்கூல்லேர்ந்து வந்தவுடனே அனுப்பறேன்னாங்கநீ என்னடான்னா இருட்டறத்துக்கு முன்னாடி வர்றேசரி இரு இதோ வர்றேன்கொண்டா பையை என்று பையை வாங்க கையை நீட்டினாள்நிஜார் பாக்கெட்டிலிருந்து பையை எடுத்துக் கொடுத்தான் வேலுஅதை எடுத்துக் கொண்டு உள்ளே போன அலமேலு அம்மா சற்று நேரத்தில் வெளியே வந்தாள்ஏண்டா.. உன் அம்மாகிட்ட வேற பையே இல்லையாஇந்த லட்சணத்திலே அஞ்சுபடி வேற கேட்டா.. இந்தப் பை ரெண்டு படியே தாங்குமா தெரியலேஇந்தா ஒரு படி நொய் குடுக்கறேன்ஒண்ணும் பேசாம வாங்கிட்டுப் போ..என்று கொடுத்தனுப்பினாள்.
சுவற்றில் அடித்த பந்து போல அதே வேகத்துடன் ஓட்டமாய்த் திரும்பினான் வேலு. அதற்குள் இருட்டி விடவே அவன் வீட்டுத் தெரு முனையில் திரும்பும்போது அங்கிருந்த நாய் ஒன்று இவனைப் பார்த்துவிட்டு குரைத்தபடி விரட்டத் தொடங்கியதுஅலறி அடித்துக்கொண்டு மேலும் வேகமாக ஓடினான் வேலுவீட்டு வாசலை அடைந்து மீனாத்தாளிடம் பையைக் கொடுத்தபடியே அம்மா அந்த கறுப்பு நாய் என்னையே துரத்துதும்மா..என்றான்.
பையை வாங்கினாள் மீனாத்தாள்என்னடா இத்துணூண்டு இருக்குவழியிலே கொட்டிட்டியா? என்று சந்தேகத்துடன் கேட்டாள்இல்லம்மா..பை நல்லால்லேன்னு இவ்வளவுதான் குடுத்தாங்க அந்த அம்மாஎன்றான் வேலுமூன்று நாளுக்குக்கூட காணாத நொய் அளவைப் பார்த்து மீனாத்தாளுக்குக் கோபமாக வந்ததுஇவ்வளவு வேலை செய்கிறோம்..ஒரு கஷ்டத்துக்குத் தானே கேட்கிறோம்கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சொன்னதுக்குப் பாதி கொடுத்தனுப்பியிருக்கிறார்களே என்று அலமேலு அம்மா மேல் ஆத்திரம் வந்தது அவளுக்குவெளியே
குரைத்தக் கொண்டிருந்த நாய் இப்போது அவள் வீட்டு வாசலுக்கே வந்து வேலுவைப் பார்த்து இன்னும் ஆக்ரோஷமாக குரைத்ததுஅடி நாயே..ஏழைங்களைப் பார்த்தா அவ்வளவு எளப்பமாப் போச்சா உங்களுக்கெல்லாம் என்று ஆத்திரத்துடன் கையிலிருந்து பையை ஒரு முடிச்சாக்கிக் கொண்டு அதாலேயே நாயின் தலையில் பலமாக ஒரு அடி கொடுத்தாள் மீனாத்தாள்.
ஏற்கெனவே நைந்திருந்த பைத்துணி அந்த வீச்சின் வேகம் தாங்காமல் நாயின் தலையைத் தாக்கிய இடத்தில் பொத்திக் கிழிந்து வேலு வாங்கி வந்த ஒரு படி நொய்  தாழ்வாரம் பூராவுமாக சிதறிக் கொட்டியதுதலையில் கைவைத்தபடி அழுதுகொண்டே உட்கார்ந்தாள் மீனாத்தாள்செய்வதறியாமல் நின்றான் வேலு.


Sunday, November 19, 2017

தெய்வம்

மதுவும் ரமணனும் பள்ளித் தோழர்கள்உயர்நிலைப் பள்ளியின் ஆரம்ப வகுப்பிலிருந்தே இருவரும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள்மது மிகவும் புத்திசாலி, கெட்டிக்காரன், நன்றாகப் படிப்பவன்பள்ளியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது மட்டுமல்லாமல் அவைகளின் நிர்வாகத்திலும் உண்மையான ஆர்வத்தோடு விரும்பி தானாகவே ஆசிரியர்களுக்கு உதவுவான்எனவே ஆசிரியர்கள் மத்தியில் அவனுக்கு நல்ல பெயர்

ரமணனும் மக்கல்லபடித்தால் மதுவுக்கு இணையாக மதிப்பெண் வாங்குமளவுக்கு புத்திசாலிதான்ஆனால், மிகவும் விளையாட்டுப்பிள்ளைஎப்போது எப்படி நடந்து கொள்வது என்ற விவரமில்லாமல் விஷமத்திலும் துடுக்குத்தனத்திலும் நாட்டம் மிக்கவனாகவே இருந்தான்நல்ல வளர்த்திஅதற்கேற்ப நன்றாக உண்பான்உணவு இடைவேளைக்கு முன்பே அத்தனை மாணவர்களின் டிபன் பாக்ஸிலிருந்தும் சிறிது உணவு நிச்சயம் குறைந்திருக்கும்அதற்கு ரமணனே காரணம்ஆனால் அவன் ரவுடி அல்ல என்பதாலும் அவனால் மற்றவர்களுக்கு வேறு தொந்தரவு எதுவும் இல்லை என்பதாலும் சக மாணவர்கள் அவனை ஒரு பொருட்டாக மதிக்காமலும் அதே சமயம் அவன்மேல் பழி உணர்ச்சி எதுவும் இல்லாமலும் இருந்தனர்

உயர்நிலைக் கல்வியின் மிக முக்கியமான பத்தாம் வகுப்பில் அப்போது காலாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. மற்ற தேர்வுகள் எல்லாம் எப்படியோ சமாளித்த ரமணனுக்கு அறிவியல் மட்டும் சோதனையாக அமைந்ததுஅறிவியல் ஆசிரியரும் சற்று கண்டிப்பானவர்மிகச் சரியாக பதில் எழுதினாலே முழு மதிப்பெண் கொடுக்க மாட்டார்  ஏனோதானோ என்று மழுப்பினால் நிச்சயம் சிகப்பு மையினால் குறுக்கே ஒரு பெரிய கோடு கிழித்து பூஜ்யத்தை அந்த பதில் முழுவதும் அடங்கும் வண்ணம் பெரிதாகப் போடுவதோடு வகுப்பிலும் காண்பிப்பார்.

பதில் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த ரமணனுக்கு தேர்வு முடிந்து விடைத்தாள்கள் கொடுக்கும் நேரம் நேரப்போகும் அவமானத்தை நினைத்தால் சற்று பயமாக இருந்ததுசுற்றுமுற்றும் நோட்டம் விட்டான்கண்காணிப்பாளர் தமிழாசிரியர் மணவாளன் தூரத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தார்வலது பக்கம் சுலைமான்சுமாராகப் படிப்பவன்இடது பக்கம் ஜனாஅவனும் இவனைப்போலவே விழித்துக்கொண்டு இருந்தான்முன்னால் பார்த்தான்மது. அவனுக்கு எல்லாம் தெரியும் என்பதால் மிக மும்முரமாக எழுதி விடைத்தாளை முடிக்கும் தருவாயில் இருந்தான்ஓரிரு சந்தேகங்களையாவது அவனிடம் கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்ற முடிவில் ஸ்ஸ் என்று மெல்ல கூப்பிட்டுப் பார்த்தான்மது காதில் விழுந்ததாகவே தெரியவில்லைஇன்னும் சற்று அழுத்தமாக ஒலியெழுப்பிப் பார்த்தான்அப்போதும் அவன் கவனிக்கவில்லைடேய் மது! கொஞ்சம் திரும்பிப் பாருடா என்றான்மது பயத்துடன் லேசாகத் திரும்பி, என்ன? என்று கேட்டான்நாலாம் கேள்விக்கான பதில் மாத்திரம் இந்த்த தாளில் எழுதி அப்படியே பின்னால் பாஸ் பண்ணுடா.. என்றபடியே தன்னுடைய விடைத்தாள் ஒன்றையும் சற்று எட்டி மதுவிடம் சேர்த்துவிட்டான் ரமணன்மதுவிற்கு பயம் வந்துவிட்டதுஅதெல்லாம் வேணாம்டாமாட்டிக்கிட்டா உனக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம் என்று முணுமுணுத்தான்கொஞ்சம் உதவி பண்ணுடா ப்ளீஸ்என்று ரமணன் சற்று உரக்க பேசும்போது மணவாளன் கவனித்துவிட்டார்.  

என்னடா நடக்குது அங்கே? என்று விரைவாக ரமணன் இருக்கும் இடத்திற்கு வந்தார்ஒண்ணுமில்ல சார்.. என் பேனாவில் இங்க் தீர்ந்துவிடும்போல் இருக்கு..அதனால் மதுகிட்ட வேற பேனா இருக்கா என்று கேட்டேன் சார்என்று சமாளிக்கப் பார்த்தான்அப்படியாடாஒழுங்காச் சொல்லு என்று மதுவை அவர் மிரட்டப்போக அப்போது ரமணன் கொடுத்த விடைத்தாளை மேஜையின் கீழே அவசர அவசரமாக தள்ளிவிட முயற்சித்தான் மதுஆனாலும் அவர் பார்த்துவிட்டார்என்ன பேப்பர் அதுபிட் அடிக்கிறீங்களா? என்று கோபத்துடன் அதை மதுவிடமிருந்து பிடுங்கிப் பார்க்கும்போதுதான் அது ரமணனுடைய விடைத்தாள் என்பதை கண்டுகொண்டார். மீண்டும் அவர் மதுவை மிரட்ட, வேறு வழியில்லாமல் நடந்ததைச் சொன்னான் மது

ரமணனை அப்போதே அவர் அறையிலிருந்து வெளியே போய் நிற்கச் சொன்னார்அது மட்டுமல்லாமல் தேர்வு நேரம் முடிந்தபின் ரமணன் மற்றும் மதுவை நேராகத் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று அவர் மீண்டும் ஒருமுறை விசாரிக்கவும் வைத்தார்தலைமை ஆசிரியர் ரமணனை கோபித்துக்கொண்டதோடு மீண்டும் இம்மாதிரி நடந்தால் பள்ளியிலிருந்து விலக்கிவைக்க வேண்டியிருக்கும் என்று  பலமாக எச்சரிக்கை வேறு கொடுத்தார்நல்ல வேளை, பெற்றோர்களை அழைத்து வா என்று சொல்லவில்லைரமணனுக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டதுஇப்படி எல்லோருக்கும் தெரிந்துபோவதைவிட குறைவான மதிப்பெண் பெற்றிருந்தால்கூடப் பரவாயில்லை என்று தோன்றியது.

எப்படியோ இந்தப் பிரச்சினையை தன்னுடைய விளையாட்டு புத்தியினாலேயே சீக்கிரத்தில் மறந்துவிட்டான் ரமணன்ஆனால் அதற்குப் பிறகு மதுவிடம் மட்டும் சற்று முகம்கொடுத்துப் பேசமலே இருந்தான்மதுவிற்கு சிறிது வருத்தம் தான். தேர்வு அறையில் நடந்ததற்கு தான் சிறிதும் காரணம் இல்லை என்றாலும் இப்படி ரமணன் மாட்டிக்கொள்ளும்படி ஆகிவிட்டதனால் அவனுக்கும் ஒரு சிறு குற்ற உணர்ச்சி இருந்துகொண்டேயிருந்ததுஅவன் எல்லா விஷயங்களிலும் கவனம் உள்ளவனாக இருந்ததனால் இவர்களிடையே நட்பில் ஏற்பட்ட தொய்வை வெகு சீக்கிரத்திலேயே சரி செய்துவிட வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தான்.

அதற்கேற்ப ஒரு வாய்ப்பும் அமைந்ததுஅவர்கள் பள்ளி தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடையும் ஆண்டாக அது அமைந்ததனால் சிறப்பாக ஒரு கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகியிருந்ததுமற்ற பல போட்டிகளுடன் இயல், இசை, நாடக நிகழ்வுகளையும் உள்ளடக்கி அமர்க்களாமாக தயார்செய்து கொண்டிருந்தனர் அனைவரும்.
நாடக நிகழ்ச்சியில் அக்காலத்தில் நடிகர் மனோகரைப் போன்று மிகுந்த கலை மற்றும் காட்சி நயத்துடன் ஒரு நாடகம் அமைத்தால் என்ன என்று மணவாளன் யோசனை கூறியது தலைமை ஆசிரியருக்கும் பிடித்துப்போகவே, பக்தப் பிரகலாதன் கதையை சுருக்கமாக பதினைந்து நிமிடங்களில் தயாரித்து மேடையேற்றுவது என்று முடிவு செய்தனர்

மதுவிற்கு இது ஒரு மிக நல்ல சந்தர்ப்பமாகத் தோன்றியதுதான் இரணியனாகவும் ரமணன் நரசிம்மராகவும் நடித்தால் தன்னைக் கொல்லும் சாக்கிலாவது ரமணன் மனம் சாந்தியடையும், நட்பில் ஏற்பட்ட விரிசல் மறைந்துவிடும் என்று நம்பினான். எனவே மிகுந்த முன்னேற்பாடுடன் பலவிதமாக மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டு ரமணனிடம் வேண்டுகோள் விடுத்தான்ரமணா, நாம் அரங்கேற்க இருக்கும் நாடகத்தில் உனக்கு ஒரு சிறப்பான வேடம் மனதில் நினைத்திருக்கிறேன்கவலைப் படாதே..உனக்கு ஒரே நிமிடம் தான் வேலைவசனம் கூட ஒன்றும் பேசவேண்டியிருக்காதுஉன்னுடைய உருவத்திற்கும் பொருத்தமான வேடம் இதுசரியாகச் செய்தால் நீதான் நாடகத்தின் ஹீரோவாக அமைவாய்என்று பீடிகைபோட்டு ஒருவழியாக சம்மதிக்கவும் வைத்துவிட்டான் மதுஎன்ன தோன்றிற்றோ திடீரென்று மணவாளன் இரணியன் வேடத்தை தான் எடுத்துக்கொள்வதாக கேட்டுக்கொண்டார். வேறு வழியில்லாமல் மது ஒப்புக்கொள்ளவேண்டியதாயிற்று.

தமிழாசிரியர் மணவாளன் முன்னிலையில் ஒத்திகை பார்க்கும்போதெல்லாம் ரமணனை நன்றாக உற்சாகப்படுத்தி கவனித்துக்கொண்டான் மதுநாடகத்தில் ரமணனுடைய பங்கு என்ன என்பதையும் விவரமாக விளக்கினான்ஒண்ணும் கவலையே படாதே ரமணாநாடகத்தின் கடைசி இரண்டு நிமிடத்தில்தான் நீ வருகிறாய்பிரகலாதனாக நடிக்கும் சரவணனிடம் அவனது தந்தை இரணியனாக நடிக்கும் தமிழாசிரியர் எங்கே உன் நாராயணன்.. தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறாயே, இதோ இந்தத் தூணில் இருப்பாரா என்று கேட்டபடியே அங்கிருக்கும் தூணைக் காலால் உதைப்பார்அப்போது அந்தத் தூண் இரண்டாகப் பிளக்கும்உள்ளேயிருந்து சிங்க முக வேடத்தில் நீ வெளிப்பட்டு அவரை அப்படியே தூக்கி அருகில் இருக்கும் வாசற்படியில் அமர்ந்து உன் மடியில் அவரைக் கிடத்தி ஆக்ரோஷத்துடன் அவர் வயிற்றைக் கிழிப்பது போல் நடிக்க வேண்டும் அவ்வளவுதான்அதற்குப் பின் திரை விழும்..அதற்குப் பின் ஒரு நிமிடக் கதையை மற்றவர்கள் நிறைவு செய்வார்கள்.. என்று விளக்கினான்ரமணனும் புரிந்தாற்போல் தலையசைத்தான்ஒத்திகையில் ஒத்துழைப்பும் கொடுத்தான்.

அந்த நாளும் வந்ததுசிறப்பு விருந்தினர்களின் பேச்சுக்கள் எல்லாம் முடிந்தபின் கதை, கட்டுரை, பாட்டு போன்ற சிறிய போட்டிகள் ஒவ்வொன்றாக அரங்கேறினஅவைகளும் முடிந்த பின் தலைமை ஆசிரியரே மேடைக்கு வந்து பெருமையாக பக்தப் பிரகலாதன் நாடகம் பற்றி அறிவித்தார்.   அனைவரும் உற்சாகத்துடன் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர்.

நாடகத்தின் கடைசிக் கட்டம்சொன்னபடியே இரணியன் அரங்கத்தின் ஓரமாக இருந்த அந்தத் தூணை நெருங்கி இதோ இந்தத் தூணிலும் இருப்பானா உன் நாராயணன்? என்று எகத்தாளமாகக் கேட்க, கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்துடன்  பலத்த ஓசையுடன் அந்தத் தூண் இரண்டாகப் பிளந்ததுமனித உடலுடன் சிங்கத்தின் தலையுடன் ஆர்ப்பரித்துக்கொண்டே வந்த நரசிம்மர், இரணியனை அப்படியே தன் இரு கையால் ஏந்தி ஒரு சுழற்று சுழற்றி தட்டாமாலை சுற்றினார்வாசற்படியின் விளிம்பில் அமர்ந்து அவனை தன் மடியில் கிடத்தியவர், மீண்டும் ஒரு உறுமலுடன் எழுந்து நின்றார்அப்போது இரணியனைப் பிடித்திருந்த கைகள் சற்று தளர்ந்தனபற்றிக்கொள்வதற்கு ஒரு பிடிப்பும் இல்லாமல் இரணியன் வேடத்தில் இருந்த மணவாளன் டமால் என்று மேடையில் விழுந்தார்மேடையில் இருந்தவர்களுக்கு இந்த திடீர் நெருக்கடியில் என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லைநல்ல வேளை திரை இயக்குபவர் உஷாராக இருந்தததனால் சட்டென்று திரையை மூடினார்ஒரே ஒரு நிமிட தாமத்திற்குப் பின் திரை விலகி நாடகம் நல்லபடியாக நடந்தேறியது.

பலத்த கரகோஷத்திற்குப்பின் அனைவரும் கலைந்தனர்அரங்கிலிருந்து இறங்கியதும் தலைமையாசிரியர் மணவாளனுக்கு கீழே விழுந்ததில் ஒன்றும் அடி படவில்லையே என்று அக்கறையுடன் விசாரித்தார்மணவாளனும் மதுவும் மட்டும் ரமணனிடம் வந்து, என்ன இப்படி திடீரென்று நீயாக ஏதோ செய்துவிட்டாயே ரமணா? உட்கார்ந்து மடியில் கிடத்தி வயிற்றைக் கிழிப்பதுதானே உன் வேலை? நாங்கள் சொல்லிக்கொடுத்ததில் இரணியனைத் தூக்கிச் சுற்றுவது, எழுந்து நிற்பது எல்லாம் இல்லையே? என்றனர்.

அவர்களை தீர்க்கமாக பார்த்து சலனமில்லாத குரலில் பதில் சொன்னான் ரமணன்: தெய்வம் நின்று கொல்லும்!