Wednesday, August 20, 2025

பயணம்

 


வாழ்க்கை என்பதும் ஒரு பயணம் 
இரயில் பிரயாணத்தைப் போலவே

வசதியாய் சன்னல் அருகில்

இரண்டிரண்டு பேராய் அமரவே


பயணம் முழுவதும் உன்னருகில்

எப்போதும் நான் அமரலாம்

பார்க்க முடியாத வேறிடத்தில்

என்னிருக்கையும் அமையலாம்


விதிதன் போக்கில் ஒருவேளை இருவரையும் அருகே அமர்த்திடின்

விழைந்தே சுமுகமாய்ப் பயணிப்போம்

இப்பயணம் மிகக் குறுகியதே!

Sunday, August 10, 2025

புதிய பறவை

 

புதிதாய் வந்த இளங்குயிலே உன்

வரவில் மிகவும் மகிழ்கிறேன்.

சிட்டாய் விரையும் நீ பறவைதானா அல்லது

காற்றில் கரையும் குரலமுதா?


பரந்த வெளியில் நான் கிடக்கையிலே

இரண்டாய் உன் குரல் ஒலிக்கிறதே!

பெரிதும் சிறிதுமான மலைகளுக்கிடையில்

அருகிலும் தொலைவிலுமாய்க் கேட்கிறதே!


ஆதவனொளியிலும் ஆயிரம் மலரிலும்

ஆர்ப்பரித்து உலாவும் உன் ஆரவாரம்

இதயத்துள் கிளறும் எண்ணங்களை

சேர்த்தே காட்சியாய்ப் பொழிகிறதே!


வசந்தத்தின் வரவே வருகவருகவே

இசைக்குயில் நீயென நானறிந்தும்

கண்ணுக்குத் தென்படா கனிமதுரமே

விண்ணின் புதிராய் விளங்குகிறாயே!


சிறுபிராயத்துச் சீரிய நட்பே

உரு(க்)கும் உன்குரல் பரிச்சயமே.

தொடர முயல்கிறேன் ஆனவழிகளில்

புதரிலும் மரத்திலும் வானகத்திலுமே.


அலைகிறேன் காட்டில் உன்னைத் தேடியே

மலையிடைப் பெரும் புல்வெளியிலுமே.

ஏக்கமும் நம்பிக்கையும் உளதேயாயினும்

காக்க வைக்கிறாய் காட்சி தராமலே!


இன்றும் தரையில் உணர்கிறேனே

உன்னமுதக் குரலைக் கேட்கிறேனே

விந்தையாக உன்குரல் கேட்டபோதிலே

அந்த பொன்நாட்களுமே வந்திடுதே!


ஓ மாயக்குயிலே! நீ மட்டுமிருந்தால்

உலகே வண்ணமாய் மாறுகிறதே!

என்னை மயக்கும் இக்கனவுலகம்

உண்மையில் உனக்கு உரித்தானதே!


"To the Cuckoo"

by William Wordsworth 


O blithe New-comer! I have heard,

I hear thee and rejoice.

O Cuckoo! shall I call thee Bird,

Or but a wandering Voice?


While I am lying on the grass

Thy twofold shout I hear;

From hill to hill it seems to pass,

At once far off, and near.


Though babbling only to the Vale

Of sunshine and of flowers,

Thou bringest unto me a tale

Of visionary hours.


Thrice welcome, darling of the Spring!

Even yet thou art to me

No bird, but an invisible thing,

A voice, a mystery;


The same whom in my school-boy days

I listened to; that Cry

Which made me look a thousand ways

In bush, and tree, and sky.


To seek thee did I often rove

Through woods and on the green;

And thou wert still a hope, a love;

Still longed for, never seen.


And I can listen to thee yet;

Can lie upon the plain

And listen, till I do beget

That golden time again.


O blessèd Bird! the earth we pace

Again appears to be

An unsubstantial, faery place;

That is fit home for Thee!

புதிய பறவை - 2

 

காலைநேரத்து அமைதியான குளிர் காற்று

கடப்பா கல்லில் கட்டிய திண்ணை

கண்ணுக்குப் போதிய சூரிய வெளிச்சம்

கருத்தைக் கவர காலைத் தினசரி


இதற்கு மேல் வேறென்ன வேண்டும் என்று

எண்ணிய படியே செய்திகளில் மூழ்கி

இருக்கும் புத்தியை மழுங்காமல் காக்க

எண்புதிர் அவிழ்ப்பது எனது வழக்கம்


சிந்தனையை ஒருமுகமாய்ப் புதிரில் குவித்து

சரியான எண்களை கட்டங்களில் நிரப்பி

சரிபார்த்துக் கொண்டு இருக்கும் வேளையில்

சிறிய குருவிகள் இரண்டின் புதிய குரல்


இனிமையாய் ஒலித்த கீச்சுக் குரல்

இதுவரை கேளாத இன்னிசை கீதம்

இதற்குச் சொந்தம் எந்த இனமோ?

இருக்கையை விட்டு எழுந்து தேடினேன்


மரத்தை வளர்த்தது உகந்ததே எனினும்

மரத்தின் கிளைகள் வளர்த்தவனை மறந்து

அமரும் பறவைகளுக்குப் புகலிடம் கொடுத்து

அவைகளை என்னிடமிருந்து மறைக்கக் கண்டேன்


சமீபத்தில் ரசித்த கவிதையைப் போல

சப்தம் கேட்டும் உருவத்தைக் காட்டாது

அலைக்கழிக்கும் சிட்டை ஆர்வத்துடன் தேடியும்

அகப்படாததால் ஆயாசத்துடன் திரும்பினேன்


சிதறிய கவனத்தில் சிதைந்தது ஒழுங்கு

சரியாக முடியாமல் சிக்கியது கணக்கு

கட்டங்களை தப்பும் தவறுமாய் நிரப்பி

குறுக்கே கோடிட்டுக் கலைத்தேன் புதிரை.


புதிர் கலைந்ததில் ஏமாற்றமே எனினும்

புள்ளினத்தின் மீது வரவில்லை கோபம்.

புதிதுபுதிதாய் பொழுதுபோக்கை மாற்றும்

பித்து மனிதரை அவை அறியுமா பாவம்!


முடிக்காத புதிரை வீசி எறிந்தேன்

முகத்தில் மெலிதான புன்னகை கண்டேன்

இனம்புரியா இம்மகிழ்சிக்குக் காரணம்

இன்றுவந்த அப்பறவைகள் நாளையும் வரலாம்!

The Indian Elephant

 

We know the six popular men of Indostan, all very blind

Who saw the elephant, each in a different shape in their mind.

Individually, they might not have been right

Collectively, they did their best sans the gift of sight.


We pride ourselves in an upright just statehood

Electing people hoping they would do us some good

But they seem to be of a different kind

Looking away from duty, as if they are blind.


There are people that promise the heaven

Only during campaign, never to be seen again.

And there are those who grab all they can

Power and greed working hand in hand.


Education good comes only at a cost

State-run schools mostly left to rot.

Competitive exams are seen as vain

As protecting turf is the concern main.


One side they pity the young widow

Other side letting liquor to freely flow.

Mountains are cut and river sand is dug

They are thriving by also selling drug.


Resourceful criminals are protected by law

Hapless citizens have no go but to withdraw.

If there is the inevitable cut in every deal

How can there be hope for the nation to heal?


There's n only one thing that sets apart this clan

From the six blind people of Indostan

Individually, what they do is awfully wrong.

Collectively, alas, they’re so powerful and strong!


(This is an offshoot on reading James Baldwin's poem "The Blind Men and The Elephant")

கேளுங்கள் கொடுக்கப்படும்

 



முதுமை என்பதால் ஒதுக்க நினைத்தாயோ?

அருமை  என்பதை உணர்ந்துகொள்.


முடிவின் தொடக்கம் என்று நகர்கிறாயோ?

முடிவின் கரகோஷத்திற்கு எழுந்து நில்.


வாழ்ந்து முடித்தவள் என நினைக்கிறாயோ?

வாழ்க்கையை பிரதிபலித்தவள் என்பதை நினைத்துப் பார்.


காலத்தைக் கடத்தியவள் அல்ல நான்

காலங்களை இணைத்தவள் மறக்காதே.


வெற்று இடத்தை நிரப்பியவள் நானல்ல

இருப்பை முழுவதுமாக அனுபவித்தவள் நான்.


அழிவை நோக்கி காத்திருக்கவில்லை நான். 

அறிந்துகொள்பவருக்காகக் காத்திருக்கிறேன்.


பசுமை காய்ந்த பயிரல்ல நான்.

புதையல் கொண்ட பொக்கிஷம்.


கிறுக்கிய வெற்றுக் காகிதமும் அல்ல

வழிகாட்டும் அரிய வரைபடம்.


சருமத்தின் சுருக்கங்கள் மூப்பின் வரவல்ல

சுதந்திரமாய் சுற்றிய பயணத்தின் சுவடுகள்.


மீண்டும் சொல்கிறேன் கேட்டுக்கொள்.

முடிந்து நினைவில் வைத்துக் கொள்.


முதியவள் என்று ஒதுக்காமல்

முதிர்ந்தவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்.

புறநகர்ப் புழுக்கத்தில் புலம்பல்

 


வெய்யிலில் நின்றாலும் வெப்பத்தில் வியர்க்காமல்

வீசித்தணித்த குளிர் காற்றுதான் எங்கே?

முற்றத்தில் அமர்ந்து முனைந்தே படிக்கும்போது

முதுகை வருடிய மென்காற்றுதான் எங்கே?


இயற்கையே, ஏனிந்த வெப்பம்?


அழுத கண்ணாய் நீர்கோர்த்த மேகங்கள்

அசையாமல் அடம்பிடித்து அங்கேயே நின்றபடி

ஆதவனைக் கொஞ்சமும் கண்ணில் காட்டாமல்

அடைமழையாய்ப் பொழிந்த அந்நாட்கள்தான் எங்கே?


இயற்கையே, ஏனிந்த மாற்றம்?


ஒருமாத மழையை ஒரேநாளில் கொட்டி

ஒருகத்திரி வெய்யிலை அரையாண்டு நீட்டி

இன்பமான பருவங்களை இல்லாததாக்கி

இயற்கைச் சீற்றங்கள் காட்டி

அச்சுறுத்துகின்றாய்.


இயற்கையே, ஏனிந்தக் கோபம்?


அதோ தெரியுதுபார் அடுத்த வீடென்று

அரைகாத தூரத்துக் குடிசையைக் காட்டி

விளையாடிக் களிப்புடன் வெகுதூரம் நடந்த

வெட்டவெளிகள்தான் மாயமானது எங்கே?


இயற்கையே,  ஏதோ புரிகிறது கொஞ்சம்.


பிழைப்புக்காகப் புலம் பெயர்ந்து பின்

பெரும் திரளாய் ஓரிடத்தில் திரண்டு

நகரம் என்ற நெருக்கடியில் நசுங்கி

நரகத்தையே கண்கூடாய்க் காண்கிறோம் இங்கே.


இயற்கையே, நீ என்செய்வாய் பாவம்?


சுயநல வேகத்தில் இயற்கையை மறந்து

வருவாய் மோகத்தில் வரம்புகள் மீறி

நாகரிக தாக்கத்தில் தன்நிலை மறக்கும்

பாதக மனிதனை ஏன் படைத்தாய்?


உன் முடிவு எங்களிடமா? எங்கள் முடிவு உன்னிடமா?

The Burden of Anger


 A heavy heart burdened with enmity

Is nothing but sorrow's home

Seething anger simmering for eternity

Is of no good to anyone.


Would anybody set the roof on fire

In order for the home to get some light?

Would anyone sane buy painful ire

By paying for it, it's just not right!


Discussing issues with openness is a gift

That could present amicable solutions

Arguments only worsen the rift

That exists between agitated factions.


Birds are not attracted easily

To ponds going dry by the day.

When penury strikes an unlucky family

Even the kith and kin stay away.


Sowing seeds in an arid desert

Would not help them to live and sprout.

Wisdom gained by agony and hurt

Do not always help others out.


மூலம் - எல்லோரும் நல்லவரே திரைப் பாடல்


பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் 

யாருக்கு லாபம்

வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக
கூரையை எரிப்பாரோ
வேதனை தன்னை விலை தந்து யாரும்
வாங்கிட நினைப்பாரோ

இதயத்தை திறந்து நியாயத்தை பேசு
வழக்குகள் முடிவாகும்
இருக்கின்ற பகையை வளர்த்திடத்தானே
வாதங்கள் துணையாகும்


வற்றிய குளத்தை பறவைகள் தேடி
வருவது கிடையாது
வாழ்க்கையில் வறுமை வருகின்ற போது
உறவுகள் கிடையாது

பாலைவனத்தில் விதைப்பதனாலே
பயிர் ஒன்றும் விளையாது
பட்ட பின்னாலே வருகின்ற ஞானம்
யாருக்கும் உதவாது